சனி, 18 ஏப்ரல், 2020

புத்தாண்டு வந்தது

பத்தாண்டு முடிந்து பத்தொன்பது கடந்து
புத்தாண்டு வந்தது இருபது இருபதாய்
பழையன மறந்து புதிய உற்சாகமுடன்
பலவித வாழ்த்துகள் கைபேசியில் குவிய
இன்முகமாய் இன்னல்கள் மறந்து இருப்போம்
நல்லவை மட்டுமே மனதில் நிலைக்க
நல்கிட இறைவன் நலமொன்றே வாழ்வினில்
நாட்டினர் வளம்பெற நற்செயல் ஓங்கிட
நாவினில் சொல்வதும் உள்ளத்து உணர்வும்
என்றும் நன்றாய் இருந்திட நினைப்போம்
எவரையும் சமமாய் அணைத்துச் செல்வோம் !

கருத்துகள் இல்லை: