சனி, 18 ஏப்ரல், 2020

உயிர்க்கொல்லி

அகில உலக மக்களையும் கேட்கிறேன்
அடுத்த நாளே உலகம் அழியுமாயின்
மதம்நாடு பதவி வருமா உங்களோடு
மனித சாதியரே அடங்கவே மாட்டீரா
அழிவதைத் தவிர உமக்கு வழியில்லையா
அகங்காரம் உம்பேச்சில் என்றென்றும் ஓயாதா
அணுவைத் துளைத்த சக்தி அழிவிற்கா
அனைத்தும் அழித்துவிடு நீயும் அழிந்துவிடு
புதியதாய் உயிரினம் பிறக்கட்டும் உலகில்
புல்பூண்டு முதல் புழுபூச்சி வரையில்
மனிதஇனம் மட்டும் மீண்டும் வேண்டாம்
மடையர்கள் படித்தும் புத்தியில்லை புரிதலில்லை
ஆயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் இருப்பதாய்
அடுக்கடுக்காய் விவாதங்கள் மிரட்டல்கள் சண்டைகள்
பூவுலகு பூலோகம் பூமித்தாய் பெயரளவில்
பொறுப்பற்ற மனிதர்கள் தேசமெங்கும் கண்டம்தோறும்
வேதனைதான் வாழ்வதிங்கே உயிர்க்கொல்லி மிருகங்கள்
வேண்டாம் இன்னொரு பிறவி இவ்வுலகில் !

கருத்துகள் இல்லை: