ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இயற்கை

இயற்கையை நேசிப்பதால் உன்னை சுவாசிக்கிறேன்
இடரான பாதையிலும் தொடர்ந்து வருகிறேன்
பனிக்கட்டி பந்தாய் விளையாடி மகிழ்கிறேன்
பசும்புல் வெளியில் புரண்டு பார்க்கிறேன்
மலைகளின் சிகரங்களில் மேகத்தைத் தழுவுகிறேன்
மலையருவித் தண்ணீரின் குளிரில் நடுங்குகிறேன்
பள்ளத்தாக்கின் உயரத்தில் கீழ்நோக்க அஞ்சுகிறேன்
குகைகளின் இருட்டில் வௌவால் சத்தம் கேட்கிறேன்
அடர்ந்த காட்டில் ஆளில்லா ஏகாந்தம் தேடுகிறேன்
படர்ந்த பனிமுகடுகளில் வலம்வரப் பார்க்கிறேன்
உன்னிலும் உயர்ந்தவள் பாரெங்கும் தேடினேன்
என்றாலும் உன்துணையே உன்னதமென உணர்ந்தேன் !

கருத்துகள் இல்லை: