இயற்கையை நேசிப்பதால் உன்னை சுவாசிக்கிறேன்
இடரான பாதையிலும் தொடர்ந்து வருகிறேன்
பனிக்கட்டி பந்தாய் விளையாடி மகிழ்கிறேன்
பசும்புல் வெளியில் புரண்டு பார்க்கிறேன்
மலைகளின் சிகரங்களில் மேகத்தைத் தழுவுகிறேன்
மலையருவித் தண்ணீரின் குளிரில் நடுங்குகிறேன்
பள்ளத்தாக்கின் உயரத்தில் கீழ்நோக்க அஞ்சுகிறேன்
குகைகளின் இருட்டில் வௌவால் சத்தம் கேட்கிறேன்
அடர்ந்த காட்டில் ஆளில்லா ஏகாந்தம் தேடுகிறேன்
படர்ந்த பனிமுகடுகளில் வலம்வரப் பார்க்கிறேன்
உன்னிலும் உயர்ந்தவள் பாரெங்கும் தேடினேன்
என்றாலும் உன்துணையே உன்னதமென உணர்ந்தேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக