சனி, 18 ஏப்ரல், 2020

காத்தருள்வீர் கடவுளரே

ஆனைமுகத்தோனே ஆறுமுகனின் தமையனே
ஆதவன் முதலான இயற்கை அன்னையே
ஆஞ்சநேயனே எமையாளும் ஈசனே
ஆதிஷேசனில் சயனிக்கும் திருமாலே
சக்தியாய் திருவாய் கல்வியாய்
சகலமும் அடங்கிய தாயே
உளம் மகிழப் போற்றி
உமது பாதம் பணிந்தோம்
காத்தருள்வீர் கடவுளரே எந்நாளும்
நித்தம் கருணை செய்வீரே !

கருத்துகள் இல்லை: