சனி, 18 ஏப்ரல், 2020

அன்னையின் நினைவு

அன்னையின் நினைவு அழுத்தமாய் மனதில்
அவளோடு இருந்த சிலநாட்கள் சிந்தனையில்
மகிழ்வான நாட்கள் குறைவே வருத்தமதுவே
மண்ணில் மறையும்வரை மாதரசி துயருற்றாள்
கண்ணில் அவளுருவம் சிற்பமாய் என்றும்
அமைதி அன்பு அரவணைப்பு அவளுருவே
அவளுக்கு இணையாக எவரையும் காண்கிலேன்
எத்துனை வயதானாலும் சேயாவேன் தாயவளுக்கு
பித்தனாய் பலகாலம் கண்ணீரும் கண்களோரம்
என்னோடு அவளுருவம் பயணிக்கும் எந்நாளும்
என்றுமே அவள்தானே முதல்கடவுள் ஆவாளே
இன்னொரு பிறவியொன்று இருப்பது உண்மையாயின்
இவளுக்கு மகனாக இருந்திடல் வேண்டுமய்யா !

கருத்துகள் இல்லை: