ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கரோனா வீட்டுச் சிறை

அலுவலகத்தை விட்டு சனிக்கிழமை கிளம்பியபோது இப்படி மாற்றம் வருமென்று நினைக்கவே இல்லை.
ஒரு நாள் ஒத்திகை பெரிதாய்த் தெரியவில்லை. கிராசரியோ காய்கறியோ வாங்கி வைக்கவும் இல்லை.
முதல்வர் சொன்ன ஊரடங்கை பிரதமர் ஏப்ரல் பதினாலுக்கு மாத்தினப்ப மனசுக்குள்ள ஒரு சின்ன அதிர்ச்சி. ஆஹா என்ன பண்றதுனு.
சரி பெங்களூருக்கு கிளம்பலாம்னா அங்கேயும் ஊரடங்கு. சமாளிக்க வேண்டியது தான்னு மனசுக்குள்ளே முடிவு பண்ணியாச்சு.
உண்மையைச் சொல்லனும்னா ஆபீஸ் போறத விட அட்டவணை போட்டு வேலை செய்யணும்னு புரிஞ்சது. கொஞ்சம் சிஸ்டம் இம்ப்ளிமென்ட் பண்ண வேண்டிய கட்டாயம்.
வேலைக்கும் ஆள் வராத காரணத்தாலே எல்லா வேலையும் வடிவேலு பாஷைல பிளான் பண்ணியே ஆகணும். பாத்திரம் துலக்கல், காலை முதல் இரவு வரை சமையல் குறைந்த பட்சம் மூன்று முறை, நடுவே வீடு பெருக்கல், வாஷிங் மெஷின் துணி துவைச்சு காய வைத்தல் எல்லாம் லிஸ்ட் போட்டாச்சு.
வாரம் ஒருமுறை கடைக்குப் போகணும் அதற்கு கிச்சன்லே ஒவ்வொரு கப்போர்டா பாத்து லிஸ்ட் எழுதிட்டு , பிரிட்ஜ் திறந்து காய்கறி லிஸ்ட் எழுதி கடைக்குப் போய் அங்கே சோஷியல் டிஸ்டன்சிங் மெயின்டெயின் பண்ணி கர்சீப் முகமூடியாக்கி சேனிடைசர் கைகழுவி பையை தூக்க முடியாம தூக்கிட்டு வேர்த்து கொட்டி வீட்டுக்கு வந்து சோப்பாலே கை கழுவி உடையை துவைக்கப் போடற வரை ஒரு பிராசஸ்.
காலைலே இட்லியோ கஞ்சியோ மத்யானம் சாதத்தோட குழம்பு, இரவு தோசை,உப்புமா,சப்பாத்தி இதில் ஏதாவது ஒன்று, தொட்டுக்க வசதிக்கேத்த ஒண்ணு, சட்னி முதல் சட்னிப்பொடி நானே செய்தது.
இப்ப சொல்லுங்க காலம் காலமா இதையே செஞ்சுட்டிருக்கிற பெண்களுக்கு சலிப்பு வருமா வராதா. இது நடுவுலே கஷாயமோ காப்பியோ வேற.
இன்னைக்கு 21வது நாள் வீட்டுச் சிறைலே. காரை ஸ்டார்ட் பண்ணி வைக்கறது. கேட் வெளியே நின்னு அம்மா உணவகம் வரவங்கள வேடிக்கை பார்க்கறது. ரிலாக்ஸிங் டைம்.
கிட்டத்தட்ட பெண்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டோம்னு தோணுது. இன்னும் 20 நாட்களா நினைச்சாலே மலைப்பா இருக்கு.
ஆனா கரோனா டிவியும் சிஇஜி79 குரூப்பும் நம்மள உயிரோட வச்சிருக்கும்னு நம்பிக்கை இருக்கு.

கருத்துகள் இல்லை: