ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பேய்க்கதை

சின்ன வயசுலே பேய்க்கதை கேட்டாலோ படம் பாத்தாலோ ராத்திரி முச்சூடும் டாய்லெட் போகக் கூட பயம்.
பக்கத்து வீட்டு தாமு உண்மை சொன்னானானு இன்னும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.
மேகலா, சரவணானு புரசவாக்கத்துல தியேட்டர்ங்க சுடுகாடு பக்கத்துலே. அந்த தியேட்டர்ஸ்லே இரவுக் காட்சிங்க பாத்துட்டு சுடுகாட்ட கிராஸ் பண்றப்ப உயிர் போய் வரும்.
அப்படி ஒரு தடவ படம் பாத்துட்டு நள்ளிரவு திரும்பறப்ப தாமு பாத்த பேய்க்கதை தான் இது.
பொதுவா கெல்லீஸ், புரசவாக்கம்லாம் நடந்தே தான் போவோம். குவார்ட்டர்ஸ் ஒட்டி ஒரு பெரிய ஒப்பன் டிரெயினோஜ் கால்வாய் போகும். அது நியூட்டோன் ஸ்டூடியோ பக்கத்துலே போய் கூவம் ஆத்துலே கலக்கும். பெரும்பாலும் மழை வரப்ப வெள்ள நீர் அதுலே போகும்.
நண்பர் ஒரு நாள் படம்பாத்துட்டு நள்ளிரவு குவார்ட்டர்ஸ்லே நுழையறப்ப ரோட். கிராஸிங் கல்வெர்ட் கிட்டே வயசான பெண்மனி உக்காந்து இருக்கறத பாத்திருக்கார்.
மனசுக்குள்ள பயம் இருந்தாலும் மெதுவா கிட்ட போய் யாரும்மமானு கேட்டிருக்கார். அது இவர கண் திறந்து பாத்தப்ப கண்ணெல்லாம் சிவந்து பயங்கரமா இருந்திருக்கு. எழுந்து உயரமா காலே இல்லாம நின்னிருக்கு. அவ்வளோதான் தாமு ஓட்டம் பிடிச்சு குவார்ட்டர்ஸ் இன்னொரு ஸைட்லே சாக்கடை தண்ணி போயிட்டு இருக்கும். அது வழியா ஓடி வரப்ப அதுக்குள்ளே விழுந்து திரும்பிப் பாத்தா அது தூரத்துலே தெரிஞ்சிருக்கு.
கை விரல்லாம் நாம சினிமாலா பாக்கற மாதிரியே நீண்ட நகத்தோட. ஒரு வழியா வீட்டு பின்வாசலுக்கு வந்து தண்ணிய தலைக்கு ஊத்தி கோணிப்பைக்குள்ளே உடம்ப நுழைச்சு அப்படியே பாத்ரூம் பக்கத்துலே படுத்துட்டாரு.
மூணு நாள் ஜுரத்துலே படுத்து ஒவ்வொருத்தருக்கா இந்தக் கதைய சொன்னாரு. அதுலே இருந்து ராத்திரி நேரத்துலே அந்தப்பக்கம் கிராஸ் பண்றப்பலாம் பேய் இருக்காணு பாப்போம்.
வாழ்க்கைலே ஒரு முறையாவது பேயை பாக்கணும்னு தோணிட்டே இருக்கும். பேய்ப் பயம் மெது மெதுவா அப்புறம் தான் விலகுச்சு

கருத்துகள் இல்லை: