வெள்ளி, 24 மார்ச், 2023

நினைவலை

 என்னை விட்டு எட்டப் போனவளே

சொன்ன சொல்லே மறந்தே போச்சுதே
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
உண்மை உரக்கச் சொல்லி உறுதியா
மனசு நோகச் செய்தவன் அவனே
ஊர் விட்டுப் போன உயிரே
யார் வீட்டில் பூத்தாயோ இன்று
பூட்டிய வீடு திறக்கவே இல்லை
சொட்டிய அன்பு எல்லாம் காணலியே
தொடாமலே மலராமலே மொட்டாய் ஆனது
சூடாமலே மாலையும் வாடிப் போனது
இக்கரை விட்டே அக்கரை சென்றாய்
அக்கறை அற்ற மனதாய் ஆனதுவோ
எக்கரை ஓரமோ எப்படி இருப்பாயோ
நினைவலை மட்டும் நிதமும் மனதோரம்
நினைவுண்டா அந்நாள் இளங் காலை
ஆலய வாசலில் திருநீறு பூசி
காலக் கோட்டில் புள்ளி அது
இறந்த காலம் நிகழ் காலமாகாது
மறதி வருமானால் மறைந்து போகலாம்

கருத்துகள் இல்லை: