வெள்ளி, 24 மார்ச், 2023

ஓயாத பாதை

 இறைவன் கொடுத்தான் வரமல்ல சாபம்

இருந்தாலும் சக்கரங்கள் ஓட வேண்டும்
அச்சாணி முறிந்தால் பாதை நீளாது
அச்சாரம் அதற்குத் தானே என்பர்
பட்டாலே தெரியும் பட்டிணத்தார் சொன்னார்
பட்டாலும் தெரியாமல் பரிதவிப்பர் இவரே
சுட்டாலும் நெருப்பில் விட்டில் விடாது
கெட்டாலும் மேன்மக்கள் ஆணினமோ அறியேன்
சொல்ல மறந்த கதைகள் ஆயிரம்
மெல்ல மறைந்தே போனது மனதில்
சுயநலம் என்பதே எளிதாய்ச் சுழலும்
பயபுள்ள நீயும் நானும் கூடவே
உழலும் வாழ்வில் உற்றது நட்பு
உதவும் சிலநேரம் ஆறுதல் சொல்லி
பெற்ற இன்பம்! பெறுக இவ்வையம்
பெரியவர் சிறியரை தெரிந்தே சேர்ப்பர்
மேடுகள் பள்ளங்கள் அறிவதே வாழ்க்கை
மேய்ந்த ஆடுகள் பட்டியில் இன்று
ஓட்டம் நிற்காமல் ஓடித் தொடரட்டும்
ஓயாத பாதை போகும் தூரம் !

கருத்துகள் இல்லை: