கொற்றவன் இங்கிருக்க கொற்றவை நீயெங்கே
உற்றவன் நானிருக்க ஊர்விட்டுப் போனாயோ
கற்றவன் சபையிருக்க துறந்தவள் எங்கேயோ
நற்றமிழ் பாடல்கள் நான்பாடி நின்றேனே
பெற்றவள் சொல்லியது மறந்தனை என்பதோ
பற்றது துறந்து பறந்தே சென்றாயோ
முற்றும் துறந்த முனிவன் நானல்லன்
சற்றும் சிந்தியாத செயலாய் ஆனதுவே
முற்றம் அமர்ந்தே நிலவைக் கேட்டேன்
சீற்றம் கொண்ட கடலலையைக் கேட்டேன்
வற்றும் மனதாய் வறண் டு போனதுவே
பற்றிப் படர கொம்பைத் தேடியே
சுற்றியே தழுவிட எதனை நாடுவேன்
காற்றாடி போலாகி் காற்றில் அலையவோ
மேற்திசை கீழ்திசை எத்திசை தேடிடவோ
குற்றம் புரிந்தேனா தண்டனை அதற்கோ
மற்றவை காரணம் எதுவும் உண்டோ
வருவாயா நாளை வாசலில் காத்திருப்பேன்
வளையோசை கேட்டே வாரி அணைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக