வந்தோம் வாழ்ந்தோம் சென்றோம் என்பதா வாழ்க்கை
தந்தது எதுவோ பிறர்க்கு என்பதை யோசி
பந்தம் பாசம் நேசம் அன்பு கொண்டு
தந்தவர் எல்லாம் வாழ்வர் என்றும் நெஞ்சில்
எந்தை தாயும் ஏழை எளியர் காத்தே.
வந்தனம் வறுமை போக்கிய யாவர்க்கும் உண்டே
சந்தனம் சாக்கடை நாற்றம் போக்கியது போலே
நிந்தனை எவரையும் செய்தல் தவிர்த்து வாழு
உந்தனை உலகம் உயர்த்திப் புகழ் பாடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக