உன்னிலே என்னிலே உயர்ந்தவன் எவனோ
தன்னிலை உணர்ந்த நல்லவன் அவனே
எதனையும் ஆராயும் மனமே உயர்ந்தது
இதமான சொற்கள் இரக்கம் கொண்டது
மதமென ஒன்று எதனால் வந்தது
மாயையை நம்பியே மனமேனோ இருண்டது
மானிடம் என்பதே மறந்தே போனது
வேற்றுமை பேசுவதே வேதமாய் ஆனது
வேர்கள் உறுதி அற்றதாய்ப் போனது
சாதிகள் மதங்கள் சங்கடம் தந்தது
போதித்த நல்லவை தேய்ந்தே போனது
மாற்றம் வருமென நம்பிக்கை குறைந்தது
மாற்று வழியென்ன யோசித்தே கடந்தது
நடப்பவை என்றும் நன்மைக்கே என்பதோ
கடக்குமா இவை அனைத்தும் என்றாவது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக