கோபம் கொள்ளப் பழகு கொடுமைகள் கண்டு
கோடுகள் தாண்டும் கேவலம் எதுவாக இருப்பினும்
கொதித்து எழு மக்கள் விரோதம் நடப்பின்
மிதித்திடு உமிழ்ந்திடு கயவர் தம் முகத்தில்
கற்றது நல்லவை தெளிதல் வேண்டியே அறிக
பொய்யரை பொசுக்கிடு பொல்லாத செய்வோரைக் களையெடு
அஹிம்சை சிலநேரம் அநியாயம் அழிய உதவாது
அடியாத மாடு படியாது என்பது பழமொழி
தவறு செய்பவன் தண்டிக்கப் பட்டே ஆகணும்
சொல்வது ஒன்று செய்வது ஒன்றானால் ஏய்ப்பே
வாய்ச்சொல் வீரர் மலிந்த நாடாய் மாறிப்போனது
நல்லவர் எங்கே சல்லடை கொண்டும் காணவில்லை
நரகமாய் வாழ்க்கை நயவஞ்சகர் மிகுந்த உலகில்
புலம்பியே நாட்கள் புலர்வது வாடிக்கை ஆனது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக