வானத்தே தாரகை ஒளி வீசக் கூலி இல்லை
வான்மேகம் மழை பொழிய ஊதியம் கேட்பது இல்லை
வெள்ளி நிலா இரவில் ஒளிவீசக் கூலி இல்லை
சுள்ளென்று ஒளிவீசும் ஆதவன் பொருள் கேட்பது இல்லை
வளைந் தோடி வளம் சேர்க்கும் நதிக்கும் இல்லை
உயிர்க் காற்று உருவாக்க மரங்கள் விலை பேசவில்லை
உணவாகப் பயிர் விளையும் பூமியும் வரி கேட்பதில்லை
ஏனோ மனிதா கடமையாற்ற கைக்கூலி உனக்கு மட்டும்
ஏளனம் பேசினாலும் காதுகள் செவிடாய்ப் போனது எதனாலே
கையூட்டு பெற்றே ஓட்டளித்து கயவரைத் தேர்ந்தெடு வெட்கமில்லை
மையிட்ட விரலுக்கும் உனக்கும் ஆயுள் தண்டனை அவசியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக