அக்ரகாரத் தெருவிலே அவன் நடந்தால் குற்றம்
பக்கத்து வீடானாலும் என் வீட்டில் அந்நியன்
தொட்டு விட்டாலோ தீட்டு வார்த்தையில் திட்டு
பட்டது பலவுண்டு பகரவே கவிதைத் துகள்
கணவனை இழந்தாலே அமங்கலம் அவளைக் காணாதே
பெண்கள் என்றாலே அடிமைகள் ஆணின் ஆணவம்
கண்கள் இழந்த குருடர்கள் கற்பு பெண்ணுக்கே
காலில் செருப்பில்லை தலை குனிந்தே நடை
தோலில் கறுப்பு நிறம் யாருடைய குற்றம்
அடிமைகள் என்றே ஆனதுவே மனித இனம்
தடிகளால் தாக்கியும் விலங்குகள் போல் வாழ்வு
மாற்றியது தவறென்று வாதாடும் பேய்க் கூட்டம்
மாக்களாய் சிலரும் மந்தைகளில் சேர்ந்தே இருப்பர்
மறப்பரோ பழையன இவை என்றும் காயம்
பறப்பது எதற்கோ பாவிகள் மீண்டும் சாக்காட்டுக்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக