மனதோடு வந்து அழகான தமிழில் உருவான கவிதை
மலைபோல இருந்தும் எளிதான சொற்கள் கருவாக கவிதை
இணையான மொழியில் இனிதான பாடல் வரிகள் கவிதை
கணையாழி பொற்காசு பலயாவும் புலவர் பெற்ற கவிதை
பலகாலம் தொடர்ந்து குறையாத அளவாய் சுரக்கின்ற கவிதை
எனதோடு உறைந்து உருவாகும் தினமும் தீந்தமிழ் கவிதை
கசிந்து உருகும் காதல் பாடும் கனவுக் கவிதை
கயமை கண்டு சினந்து பாடும் அனலான கவிதை
கடலும் வானும் காற்றும் நீரும் விளையாடும் கவிதை
எனையாளும் தமிழ்த் தாய் எனக்கு அருளும் கவிதை
உனையே நினைத்து உருகும் நிதமும் எனது மனமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக