வெள்ளி, 24 மார்ச், 2023

கவிதை

 மனதோடு வந்து அழகான தமிழில் உருவான கவிதை

மலைபோல இருந்தும் எளிதான சொற்கள் கருவாக கவிதை
இணையான மொழியில் இனிதான பாடல் வரிகள் கவிதை
கணையாழி பொற்காசு பலயாவும் புலவர் பெற்ற கவிதை
பலகாலம் தொடர்ந்து குறையாத அளவாய் சுரக்கின்ற கவிதை
நலமோடு நாளும் வாழ்த்துப் பாடல் வழங்கும் கவிதை
எனதோடு உறைந்து உருவாகும் தினமும் தீந்தமிழ் கவிதை
கசிந்து உருகும் காதல் பாடும் கனவுக் கவிதை
கயமை கண்டு சினந்து பாடும் அனலான கவிதை
கடலும் வானும் காற்றும் நீரும் விளையாடும் கவிதை
எனையாளும் தமிழ்த் தாய் எனக்கு அருளும் கவிதை
உனையே நினைத்து உருகும் நிதமும் எனது மனமே !

கருத்துகள் இல்லை: