வெள்ளி, 24 மார்ச், 2023

புதிய ஆண்டு

 புதிய காலை புதிய ஆண்டு

புலரும் பொழுது வெண்பனி மூட்டம்
மார்கழிக் குளிரில் போர்வையின் வெப்பம்
மாதங்கள் தொடங்க மனங்களில் மகிழ்ச்சி
ஆலயம் தோறும் ஆண்டவன் தொழுகை
ஆயிரம் ஆயிரமாய் மக்கள் வாழ்த்தும்
அமைதியும் நலமும் அருள் புரிவானாக
அனைவர் வாழ்வில் ஆனந்தம் பெருகிட

கருத்துகள் இல்லை: