வெள்ளி, 24 மார்ச், 2023

இறைவனின் கொடை

 எங்கும் இன்பம் எதிலும் இன்பம்

பொங்கும் கடலும் கொட்டும் மழையும்
கதிரவன் வரவும் நிலவின் ஒளியும்
கருக்கல் பனியும் ஓடும் ஆறும்
பசுமை வயலும் அடர்ந்த காடும்
படர்ந்த புல்லும் பாயும் அருவியும்
கருமேகக் கூட்டமும் வானத் தாரகையும்
உருண்டோடும் ஓடையும் உயர்ந்த மலையும்
கண்ணுக்கு அழகாய் எத்தனை இன்பம்
விண்ணிலும் மண்ணிலும் கொட்டிக் கிடக்கும்
கற்பனைத் தோற்றம் கண்ணில் தோன்றும்
கவிதை பிறக்கும் காவியம் படைக்கும்
இயற்கை என்பது இறைவனின் கொடையாய்
இறைந்து சிதறி இன்பம் ஊட்டும்

கருத்துகள் இல்லை: