வெள்ளி, 24 மார்ச், 2023

வேண்டும் வேண்டும்

 என்றும் அமைதி வாழ்வில் வேண்டும்

எண்ணிய நல்லவை ஆதல் வேண்டும்
சொல்லிய சொல்லில் இனிமை வேண்டும்
கல்வியைப் போற்றி பயின்றிட வேண்டும்
வறியவர் வறுமை போக்கிட வேண்டும்
அறிஞர் நூலினைக் கற்றிட வேண்டும்
தூயநட்பை எந்நாளும் பேணிட வேண்டும்
காயங்கள் மனதில் களைந்திட வேண்டும்
ஊருக்கு நல்லதோர் தலைவர் வேண்டும்
ஊதாரித் தனத்தை ஒழித்திட வேண்டும்
அன்பான வார்த்தைகள் சொற்களில் வேண்டும்
அன்னையின் அன்பில் திளைத்திட வேண்டும்
கண்ணுக்கு இனிய காட்சிகள் வேண்டும்
கற்பனைத் திறனில் கவிதைகள் வேண்டும்
இனிய தமிழ் என்னோடு வேண்டும்
கனிவாய் பேசியே மகிழ்தல் வேண்டும்
கருணை காதல் இரக்கம் வேண்டும்
கடவுள் இயற்கை இரண்டும் வேண்டும்

கருத்துகள் இல்லை: