ஆணென்ன செய்தானோ என்றவரே கேளும்
ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மை அல்ல
காலம் எல்லாம் கடன் பட்டே
காரியம் ஆற்றி நிற்பான் பிறருக்காய்
உறவு துறந்து ஊர் சுற்றி
பெண்ணோ மகவைச் சுமந்து மகிழ்வாள்
ஆணோ குடும்பம் சுமந்து உவப்பான்
காலச் சக்கரம் உருண்டோட அச்சாணி
கால்களில் சக்கரமாய் இவன் மேனி
இரவு பகல் பாராத பெருமகன்
இவனது உழைப்பே இணைக்கும் பாலம்
இல்லாது இன்பம் போகும் இவனின்றி
கல்லான உடம்பாய் கடும் உழைப்பு
வில்லாக வளைந்தே உயரும் வாழ்க்கை
தாயும் ஆவான் பல சமயம்
சேயான மகள் இவன் தாயாவாள்
பாசம் பலகோடி மனதில் மறைந்தே
நேசமான நண்பர் இவன் துணை
மலர்ந்த முகமே இவன் சொத்து
மகனே என்ற நாளில் இருந்து
ஆண்டுகள் உருண்டோட தேகம் முதிர்ந்தே
ஆணினமே இன்றல்ல என்றுமே உன்தினமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக