வெள்ளி, 24 மார்ச், 2023

பாடினேன் பாடினேன்

 என்நாட்டு மக்கள் நலம் பெறப் பாடினேன்

எந்தையும் தாயும் சுகம் பெறப் பாடினேன்
பெற்ற மகவும் சிறப்பு உறப் பாடினேன்
கற்றவர் சபையில் உயர்ந்து ஓங்கிடப் பாடினேன்
வறியவர் அற்ற சமுதாயம் வேண்டிப் பாடினேன்
சிறியவர் பெரியவர் பெருமை உணரப் பாடினேன்
மதங்கள் சாதிகள் ஒழிந்து அழிந்திடப் பாடினேன்
வேதனை வாழ்வில் மறைந்தே ஓடிடப் பாடினேன்
இயற்கை வளமும் செழித்து பசுமையாகப் பாடினேன்
இயலாதோர் வாழ்வில் ஒளி சேர்க்கப் பாடினேன்
நல்லதோர் தலைவர் ஊருக்கு ஒன்றெனப் பாடினேன்
நல்லாட்சி என்றுமே நன்மைகள் நல்கிடப் பாடினேன்
காதலர் யாவரும் கைகோர்த்து வாழ்ந்திடப் பாடினேன்
காவலர் கயவரைக் களைந்து ஒழித்திடப் பாடினேன்
இத்தனை பாடினேன் இன்னமும் பாடியே நின்றேன்
பித்தனாய் நானும் பிறை சூடியவனைப் பாடினேன்
சொல்வீரா இப்போது சுயநலம் எங்கே பாடினேன்
சொல்லாலே பதில் தந்தேன் பொருளில் குற்றமுண்டா ?

கருத்துகள் இல்லை: