தோழியே ஞாபகம் இருக்கா உனக்கு
தோடுகள் குலுங்க கல்லாட்டம் ஆடினாயே
இரண்டு நான்காக கற்கள் மேலறிந்து
இதனோடு பல்லாங் குழி ஆட்டமும்
ஆண் மகனும் ஆடலாம் என்றும்
எல்லையற்ற மகிழ்ச்சி மனதில் பொங்கிட
இனிப்பு ஒன்றை காக்கா கடிகடித்து
இனிதாக உண்டதும் மறக்க முடியுமா
வைகுண்ட ஏகாதசி என்றாலே பரமபதம்
வைகறை வரையில் அரட்டை ஆரவாரம்
மழைக் காலம் வந்தாலே குதூகலம்
மழலையாகி மழை நீரில் நீச்சல்
கிராமத்து தெருக்களில் ஓடி விளையாடி
கிணற்றில் குதித்து கோட்டை கட்டி
ஈச்சமரம் தேடி மலையோர ஓடையில்
ஈசல் கலந்த பொரியோடு கடலை
தின்னக் கிடைக்கும் வேர்க்கடலை வெல்லம்
திகட்டாத நுங்கும் இளநீரும் மாங்காயும்
கவலைகள் அற்று சிறகடித்த நாட்கள்
கடந்த கால நினைவுகள் இனிமையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக