வெள்ளி, 24 மார்ச், 2023

தொடரும் கதை

 எங்கிருந்தாலும் வாழ்க ஏற்புடை வாழ்வாங்கு வாழீ

என்ன தவம் செய்தேனோ என்றாள் ஏந்திழை
தொலைதூரம் சென்றாள் சோர்வுற்றாள் துவண்டாள் துடித்தாள்
கலையாத காதலுக்கு முடிவேது மூப்பிலும் மறையாது
முதல் காதல் முடியாது போனாலும் பசுமை
சாதல் வழியல்ல சாகாத நினைவுகள் நிரந்தரம்
போகாத ஊருக்கு வழி தேடும் பருவம்
போகட்டும் விட்டு விடு வாழக் கற்கட்டும்
இன்று நேற்றல்ல என்றும் தொடரும் கதைதானே
தொன்று தொட்டு காவியங்கள் பலவின் கருதானே
எல்லைகள் கடந்த இன்ப வேதனை என்றாலும்
எனக்கும் உண்டு உனக்கும் உண்டு எழுதிடவே

கருத்துகள் இல்லை: