இரவுகள் பகலாய் நினைவுகள் கனவாய்
இதயம் நுழைந்து கனக்கும் சுமைகள்
வாழ்க்கை வட்டப் பாதைகள் என்றும்
வாலிபம் தொடங்கி வயோதிகம் வரையில்
உயரே போவதும் இறக்கம் காண்பதும்
காட்சிகள் மாற்றம் திரையினில் தோன்றும்
ஆட்சி கொள்ளும் அவரவர் மனதில்
பாவங்கள் போக்கி புண்ணியம் தேடும்
பார்வைகள் ஆயிரம் கதைகள் பேசும்
ஓட்டமும் நடையும் ஓயாது தொடரும்
ஓரங்க நாடகம் தினமும் நடந்தேறும்
காலச் சக்கரம் கால்களை முடக்கும்
காலன் வரும்வரை தாள்கள் மாறும்
மனித சரித்திரம் மறந்து போகும்
மனதில் நிற்பவர் சிலரே அல்லவோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக