எனக்குள் குமுறும் எரிமலை எதனையும் எரிக்கும்
உனக்கும் தேவை யெனில் தருவேன் அதனை நானே
கனக்கும் மனதின் கையறு நிலை தனைக் கண்டு
கனலாய் தோன்றும் நிலையே இதனின் காரணம் ஆகும்
மனிதன் மாறிய விலங்காய் மற்றவர் அழிவை நாடினான்
கடமை என்பதே காசாய்ப் போன அவலம் காண்பீர்
மடமை மனதில் ஓங்கி மயக்கம் கொண்ட மாக்கள்
நல்லவை தீயவை அறியும் திறனும் இல்லை அன்றோ ?
பொல்லாத சொல்லே உயர கல்லாத கயவர் ஆனார்
விடியல் இல்லாத இரவாய் இருளில் மூழ்கிய மனங்கள்
கடினம் இந்நிலை மாறுதல் என்றால் பொங்கும் சினமே
நல்லவர் இல்லாத உலகில் வாழ்வது நரகம் அன்றோ
நல்குவீர் நீவிர் விடுதலை உண்டா இந்நிலை மாறிட ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக