வெள்ளி, 24 மார்ச், 2023

எரிமலை

 எனக்குள் குமுறும் எரிமலை எதனையும் எரிக்கும்

உனக்கும் தேவை யெனில் தருவேன் அதனை நானே
கனக்கும் மனதின் கையறு நிலை தனைக் கண்டு
கனலாய் தோன்றும் நிலையே இதனின் காரணம் ஆகும்
மனிதன் மாறிய விலங்காய் மற்றவர் அழிவை நாடினான்
புனிதம் மறந்த வாழ்வே புவியில் இன்று உண்மை
கடமை என்பதே காசாய்ப் போன அவலம் காண்பீர்
மடமை மனதில் ஓங்கி மயக்கம் கொண்ட மாக்கள்
நல்லவை தீயவை அறியும் திறனும் இல்லை அன்றோ ?
பொல்லாத சொல்லே உயர கல்லாத கயவர் ஆனார்
விடியல் இல்லாத இரவாய் இருளில் மூழ்கிய மனங்கள்
கடினம் இந்நிலை மாறுதல் என்றால் பொங்கும் சினமே
நல்லவர் இல்லாத உலகில் வாழ்வது நரகம் அன்றோ
நல்குவீர் நீவிர் விடுதலை உண்டா இந்நிலை மாறிட ?

கருத்துகள் இல்லை: