வெள்ளி, 24 மார்ச், 2023

தினம் ஒரு கவிதை

 தினம் ஒரு கவிதை தீந்தமிழில்

இனம் கண்டு கொண்டேன் வரிகளில்
சினம் சில நேரம் உண்டு
மனம் கொள்ளை கொண்டு செல்லும்
வானம் எங்கும் வலம் வரும்
வனம் சுற்றி வந்து சேரும்
நாணம் கொண்ட பெண்ணின் நகைப்பு
காணக் கண் கோடி வேண்டும்
கண்களின் அசைவு காதல் பேசும்
கன்னச் சிவப்பு காவியம் ஆகும்
பெண்மையின் மென்மை பேசிய கவிதை
ஆண்மை அடங்கும் அதிசயம் சொல்லும்
விந்தைகள் புரியும் வித்தகம் சொற்களில்
சந்தம் அணிந்த வார்த்தைகள் மாலையாய்
இன்றும் என்றும் தொடரும் நாட்களில்
இனியதை ஏற்று பருகிட வாரீர்

கருத்துகள் இல்லை: