இளங்காலைக் குளிர் போர்வையில் சுகம்
இனிக்கும் கற்பனை ஊற்று தாகம்
இசைக்குப் பாட்டாய் ஓரிரு வரிகள்
இயற்கை அன்னையை வணங்கிய சொற்கள்
கடமை மறவாத கருத்து உண்டு
இறைவன் இயற்கை கலந்தே உலகம்
கறையற்ற மனமே கடவுள் வாழிடம்
எங்கோ தொடங்கி எங்கோ முடிவது
எத்தனை மாற்றங்கள் எழுதிய ஏட்டினில்
வாழ்க்கை என்பதே சதுரங்கப் பலகை
தாழ்வதும் உயர்வதும் வாடிக்கை ஆகிடும்
ஓட்டம் நிற்காமல் காலங்கள் மாறும்
ஆட்டம் பலவிதம் ஆடிடும் கால்கள்
கிழக்கிலே தோன்றி மேற்கில் மறையும்
வழக்கு கதிரவன் தினமது தவறாது
பாதையும் நீண்டது பயணம் தொடர்ந்தது
பாவங்கள் களைந்த இறுதியை நோக்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக