மெட்டுக்குப் பாட்டு ஒண்ணு சொல்லுவோமா
பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே
எட்டுக்கும் ஏழுக்கும் நடுவே வருவதெது
பட்டெனச் சொல்லி பக்கென்று சிரிப்பாயோ
சட்டைக்குப் பொத்தானே இல்லாத சிரிப்பு
முட்டாப் பயலுக முயலுக்கு மூணுகால்
எட்டாக் கனிக்கு எட்டப்ப நாடகம்
கட்டிக் காத்தது நாமல்லோ மன்னவா
எட்டிப் பிடிக்க எட்டாது உம்மாலே
பட்டிதொட்டி எங்கும் பசப்பும் வசனங்கள்
கொட்டிக் கொடுத்தாலும் மாறாத உள்ளம்
ஆட்டையைப் போடவே ஆடும் நாடகங்கள்
பட்டது போதுமய்யா எட்டப் போய்விடும்
சுட்டாலும் நீரெமக்கு எம்மூரில் தேவையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக