என்னில் கலந்து எண்ணம் நிறைந்து
என்றும் தொடரும் தமிழே தாயே
கனவில் நினைவில் கவிதை வடிவில்
தினமும் உன்னைச் சார்ந்தே வாழ்வே
சொல்லில் பொருளில் இனிமை உனதே
செவிக்கு இனிதாய் இசைக்கும் வரிகள்
காவியம் யாவும் உன்புகழ் பாடும்
ஓவிய வரிகள் ஓராயிரம் உண்டு
கற்களில் செதுக்கிய செப்பேடுகள் பழமை
கற்றலும் கேட்டலும் கன்னலின் சுவையாய்
உலகின் தொன்மை மொழியெனப் போற்றுவோம்
உன்னிலும் உயர்ந்தவள் ஞாலத்தில் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக