மெல்லத் திறந்தது மனக் கதவு
மெதுவாய் அசை போட்டன நினைவுகள்
கற்பனை ஊற்று பெருகி ஓடியது
கனவுகள் மனதில் நிறைந்து வழிந்தன
எதையோ தேடியே ஓட்டம் தினமும்
சொல்லத் தெரியா வினாவும் விடையும்
மெல்லத் தேய்ந்த நிலவு போல்
இருளாய் மாறிய மனவெளித் தோற்றம்
கருவில் உருவாய் நிழலாய் நிதமும்
தேடல் தொடர்ந்தது விடையைத் தேடி
கடலில் தேடிய முத்தைப் போன்றே
என்றோ ஒருநாள் விடியல் வரலாம்
என்றது ஒருகுரல் உள்ளத்தின் ஆழத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக