சனி, 20 ஜூலை, 2019

அப்பா

நல்ல விதைகள் நன்மரங்கள் ஆகும்
நல்ல வாழ்வு நமக்களித்தவர் ஆரோ
தோளுக்குச் சுமையாய் உடல் சுமந்த உயிரே
தோழனாய் மாறி தோளோடும் உரசினாயே
மௌனமாய்க் கண்ணீரை துடைத்த கரங்கள் உனதே
மெள்ளக் கரம் பிடித்து நடை பழக்கினாயே
காலங்கள் தோறும் மற்றவர்க்காய் வாழ்ந்தாயே
காற்றோடு கரைந்து போனாயோ இன்று
இருக்கும் நாளெல்லாம் உன்னருமை தெரியாதே
இறைவன் மனிதனாய் இயங்கிடும் உன்னுருவில்
அப்பா என்ற வார்த்தை எத்தனை அழகு
அன்போடு ஒருமுறை அப்பா....அணைக்கட்டுமா ?

கருத்துகள் இல்லை: