நல்ல விதைகள் நன்மரங்கள் ஆகும்
நல்ல வாழ்வு நமக்களித்தவர் ஆரோ
தோளுக்குச் சுமையாய் உடல் சுமந்த உயிரே
தோழனாய் மாறி தோளோடும் உரசினாயே
மௌனமாய்க் கண்ணீரை துடைத்த கரங்கள் உனதே
மெள்ளக் கரம் பிடித்து நடை பழக்கினாயே
காலங்கள் தோறும் மற்றவர்க்காய் வாழ்ந்தாயே
காற்றோடு கரைந்து போனாயோ இன்று
இருக்கும் நாளெல்லாம் உன்னருமை தெரியாதே
இறைவன் மனிதனாய் இயங்கிடும் உன்னுருவில்
அப்பா என்ற வார்த்தை எத்தனை அழகு
அன்போடு ஒருமுறை அப்பா....அணைக்கட்டுமா ?
நல்ல வாழ்வு நமக்களித்தவர் ஆரோ
தோளுக்குச் சுமையாய் உடல் சுமந்த உயிரே
தோழனாய் மாறி தோளோடும் உரசினாயே
மௌனமாய்க் கண்ணீரை துடைத்த கரங்கள் உனதே
மெள்ளக் கரம் பிடித்து நடை பழக்கினாயே
காலங்கள் தோறும் மற்றவர்க்காய் வாழ்ந்தாயே
காற்றோடு கரைந்து போனாயோ இன்று
இருக்கும் நாளெல்லாம் உன்னருமை தெரியாதே
இறைவன் மனிதனாய் இயங்கிடும் உன்னுருவில்
அப்பா என்ற வார்த்தை எத்தனை அழகு
அன்போடு ஒருமுறை அப்பா....அணைக்கட்டுமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக