சனி, 20 ஜூலை, 2019

நீயின்றி வாழ்கின்ற நினைவுகள்

இழையோடும் நூலோடும் சேர்ந்த உறவே
இதழோடும் இமையோடும் உரசும் உயிரே
தோளோடும் சிரசோடும் சாய்ந்தாடும் நட்பே
உள்ளாடும் உயிராடும் நீயெந்தன் துணையே
கண்ணோடும் கருத்தோடும் உரையாடும் சொல்லே
காலங்களோடும் கனவுகளோடும் வாழ்கின்ற வாழ்வே
நிமிடங்களோடும் நாட்களோடும் கடந்தோடும் முள்ளே
நீயின்றி வாழ்கின்ற நினைவுகள் பொய்யே !

கருத்துகள் இல்லை: