சனி, 20 ஜூலை, 2019

சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜுலை 4,2019

உலகெங்கும் பரவி இருக்கும் தோழரே தோழியரே
உயர்ந்த சிந்தனைகள் தொன்று தொட்டே நம்சொத்து
காலத்தால் அழியாமல் கடல் கடந்து வாழும் 
காப்பவர் யாவரும் தமிழரே வணங்கிடுவோம் அவர்தம்மை
தாய்நாட்டிலன்றி பிறநாட்டிலும் புலம்பெயர்ந்து மொழிவளம் காத்து
தாயின்கரம் பிடித்தே வாழ்விக்கும் தகை சான்றோரே
சொல்ல ஆயிரம் வார்த்தைகள் போதாது மொழிவளர்க்கும் பேரரிவாளரே
சோர்விலர் சொல்லின் செல்வர் பெருமை சேர்த்தீர்
தோண்டிட ஊறிடும் மணற் கேணியாம் உரைத்திடுவர்
தொலைந்த ஏடுகள் பலவாம் நம்மொழியில் புதையலாய்
தங்கம்போல் வைரம்போல் அதற்கும் மேலாய்
ஓங்கிய மொழியாய் மூத்த மொழியாம் முதல் மொழியாம்
நம்மோடு நில்லாமல் புவியுள்ள மட்டும் வாழும்
எம்மோடு கலந்து உயிர்நாடியாய் தமிழன்னை என்றுமிருப்பாள் !

கருத்துகள் இல்லை: