சனி, 20 ஜூலை, 2019

உணர்ந்து செயல்படு

என்னவாயிற்று மண்ணின் மைந்தர்க்கு
எங்கோ எதுவோ‌ பாதைமாறிச் செல்கிறது
முன்னோக்கும் பார்வை பின்னோக்கிப் போனதேன்
முண்டாசுக் கவியின் வார்த்தைகள் பொய்யாகுமோ
முரண்பட்ட மனங்கள்புற்றீசல் போல்
முடிந்த கதைகள் பேசி முத்தெடுப்பீரோ
சாதீயம் மதவெறி யாருக்கு வேண்டும்
சாத்திரங்கள் சொல்வது அவைகள் அல்ல
விட்டுவிடுங்கள் மனிதர்களே மயக்க நிலையிது
நீரில்லாத வறண்ட நாக்கு பேசாமல் போகும்
நிலையில்லாத வாழ்வில் மேம்படுதல் முயல்
நிலவுக்குப் போகும் நேரத்தில் பழங்கதை ஏன்
வாழ்வின் வழிதேடு வசை பாடாதே
வேற்று கிரகங்கள் செல் நீரைத்தேடு
வேதனை கொள்கிறது மனது நச்சு விதைகள் கண்டு
வேர்விட்டாலே கூண்டோடு அழியும் உன்இனம்
உணர்ந்து செயல்படு உணர்ச்சி தவிர்

கருத்துகள் இல்லை: