உற்றாரைத் துறந்து ஊர்ஊராய்த் திரிந்து
உச்சி வெயில் கொட்டும் மழை
புயல் காற்று புழுதிக் காற்று
புறநகர் காடுமேடு மலைப்பாதை
இதுவே உன் வாழுமிடமாய் தினமும்
வசதியற்ற வாழ்விடம் கிடைப்பதே உணவு
தாய்நாடென்றும் தரணியில் எங்கெங்கும்
தன்சுகம் துறந்து பிறருக்காய் உழைக்கும்
உத்தமனே நீயும் போர்வீரனே களம்தான்வேறு
எல்லை காப்பவன் அவனென்றால் நீயோ
நாட்டு வளம் செழிக்க தொழில் முனையில்
வணங்குவதற்கு நீயும் கடவுள் தான்
வாழும் கடவுள் தொழில்களின் தெய்வம்
உழைப்பாளி தினம் மட்டும் அல்ல
என்றுமே உன் தினம் தான்
நீயின்றி மாட மாளிகை கோபுரங்கள்
ஏன் தெய்வங்களே வாழ இடமில்லை !
உச்சி வெயில் கொட்டும் மழை
புயல் காற்று புழுதிக் காற்று
புறநகர் காடுமேடு மலைப்பாதை
இதுவே உன் வாழுமிடமாய் தினமும்
வசதியற்ற வாழ்விடம் கிடைப்பதே உணவு
தாய்நாடென்றும் தரணியில் எங்கெங்கும்
தன்சுகம் துறந்து பிறருக்காய் உழைக்கும்
உத்தமனே நீயும் போர்வீரனே களம்தான்வேறு
எல்லை காப்பவன் அவனென்றால் நீயோ
நாட்டு வளம் செழிக்க தொழில் முனையில்
வணங்குவதற்கு நீயும் கடவுள் தான்
வாழும் கடவுள் தொழில்களின் தெய்வம்
உழைப்பாளி தினம் மட்டும் அல்ல
என்றுமே உன் தினம் தான்
நீயின்றி மாட மாளிகை கோபுரங்கள்
ஏன் தெய்வங்களே வாழ இடமில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக