சனி, 13 ஜூலை, 2019

இயற்கை அன்னையின் சாபம்

சுட்டெரிக்கும் வெயிலே கோபம் கொண்டாயோ
சூறாவளிக் காற்றும் பாதை மாறியதே
வெப்பம் தாளாத வேதனை தந்தாயே
இயற்கை அன்னையின் சாபம் இதுதானோ
காடுகள் குளங்கள் அழித்ததன் பயன்தானோ
தணியுமோ வெப்பத்தின் தாக்கம் எம்‌ மீது
தகைசால் நல்லவர் உளரோ மழை கொணர
நிலமதில் நீரும் மனமதில் அமைதியும்
நீள்வெளிப் பசுமையும் நன்னீர் வயல்களும்
நாட்டினில் மீளுமோ கனவாகிப் போகுமோ ?

கருத்துகள் இல்லை: