சுட்டெரிக்கும் வெயிலே கோபம் கொண்டாயோ
சூறாவளிக் காற்றும் பாதை மாறியதே
வெப்பம் தாளாத வேதனை தந்தாயே
இயற்கை அன்னையின் சாபம் இதுதானோ
காடுகள் குளங்கள் அழித்ததன் பயன்தானோ
தணியுமோ வெப்பத்தின் தாக்கம் எம் மீது
தகைசால் நல்லவர் உளரோ மழை கொணர
நிலமதில் நீரும் மனமதில் அமைதியும்
நீள்வெளிப் பசுமையும் நன்னீர் வயல்களும்
நாட்டினில் மீளுமோ கனவாகிப் போகுமோ ?
சூறாவளிக் காற்றும் பாதை மாறியதே
வெப்பம் தாளாத வேதனை தந்தாயே
இயற்கை அன்னையின் சாபம் இதுதானோ
காடுகள் குளங்கள் அழித்ததன் பயன்தானோ
தணியுமோ வெப்பத்தின் தாக்கம் எம் மீது
தகைசால் நல்லவர் உளரோ மழை கொணர
நிலமதில் நீரும் மனமதில் அமைதியும்
நீள்வெளிப் பசுமையும் நன்னீர் வயல்களும்
நாட்டினில் மீளுமோ கனவாகிப் போகுமோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக