சனி, 20 ஜூலை, 2019

பெண்மை

எண்ணிலடங்கா ஆசை உண்டு பெண்ணே
ஏனோ உன்னால் உயிர்ப்பிக்க இயலவில்லை
கண்ணில் ஏக்கங்கள் கலையாத கனவுகள்
காலமெல்லாம் உன்னோடே உறைந்து போகிறது
பெண்ணாய்ப் பிறந்தாலே பெரும்பாவம் என்றாயோ
பெண்மைக்கு அணிகலன் தாய்மை ஒன்றேதான்
ஆணாய்ப் பிறந்து சுதந்திரமாய்த் திரிய ஆசை
ஆயினும் மறவாதே இக்கரைப் பச்சை
உன்னிலும் உயர்வாய் ஒருபிறவி உண்டா
உன்னதம் என்பதே உன்னுள்ளே கருணை
வலிகள் சுமந்து வாழ்ந்திருந்தாலும் தாயே
வாழும் தெய்வம் நீதானே அம்மா !

கருத்துகள் இல்லை: