சனி, 13 ஜூலை, 2019

நல்லோர் எவரும் இலரோ

நல்லோர் எவரும் இலரோ நானிலத்தில்
வான் பொய்ப்பினும் தான்பொய்யாத காவிரி எங்கே
மணற்கேணிகள் மழை நீரின்றிப் போயினவே
செம்புலப் பெயல் நீரும் காண்கிலையே
சப்த ஸ்வரங்கள் இசையெழுப்ப வருமோ
சண்டாளர்கள் பெருகியதால் வருணன் கோபித்தானோ
நீரின்றி அமையாத இவ்வுலகு பாலையாகுமோ
பூமித்தாயை சிதைத்த நமக்கு தண்டனைதானோ
மாறிடுமோ இந்நிலை மயானமாய் மாறாமல்
கூறிடுவாய் இறைவா கூக்குரலுக்கு பதிலை

கருத்துகள் இல்லை: