சனி, 20 ஜூலை, 2019

பூமித் தாய்

பூமித்தாயை வணங்கி உறுதிமேற் கொள்வோம்
புவிதன்னில் இனியேனும் இயற்கையை வாழவைப்போம்
காடுகள் அழித்த வளர்ச்சி தேவையில்லை
குளம் ஏரி ஆறுகள் மாளிகையாக தடைசெய்வோம்
மழைநீர் வீணாகப் போகாமல் தேக்கிவைப்போம்
மாசுநீரை நன்னீரில் கலப்பு அனுமதியோம்
தொழில்புரட்சி எனக்கூறி பசுமை அழிதல் ஒழிப்போம்
ஊர்தோறும் நீர்நிலைகள் மரங்கள் நடுவோம்
ஊரணி நீரை உணவுக்கு மட்டுமே உபயோகிப்போம்
மனதில் கொள்வோம் மனிதன் இல்லா வளர்ச்சி எதற்கு
நீரும் காற்றும் மாசுபட்டு மனிதன் மாய்ந்து போனபின்
சுடுகாட்டுப் பேய்களும் நரிகளுமே நாட்டையாளும்
சிந்தனை செய்மனமே சீர்தூக்கிப் பார்
நிந்தனை செய்த வாய்க்கு வாய்க்கரிசி கிட்டாது
நிறமில்லை மொழியில்லை நீயும் நானுமில்லை
பூமித்தாயே மக்களற்ற உன்வீட்டைக் காணஇயலுமா ?

கருத்துகள் இல்லை: