சனி, 13 ஜூலை, 2019

சீரிளமைத் தலைவன்

உண்மைகள் பொய்யாகவும் பொய்மைகள் உண்மையாகவும்
உரசிப் பார்த்தால் தங்கம் போலவும்
மாயமான்கள் தேடிச் செல்ல நாமுமிஙகே
மதிமயங்கி காடுமேடெல்லாம் ஓட்டம் ஓய்வில்லை
குடிலிலே இருக்கும் மாதவளை கவரக்கள்வன்
குற்றமற்ற அவளோ வெளிப்பூச்சில் ஏமாந்தாள்
கொண்டவனைப் பிரிந்தாள் பேதலித்தாள் பேதை
கண்டவனும் இவள் மீது காமமுற்றான் அய்யகோ
சிறைப்பட்ட நங்கையவள் தவித்தாள் மெலிந்தாள்
சிறகடித்து வருவானா சீரிளமைத் தலைவன்
சிதைப்பானோ சூழ்ச்சியரை மகுடம் தரிப்பானோ ?

கருத்துகள் இல்லை: