சனி, 13 ஜூலை, 2019

ஆதவன் கோபம்

உறக்கம் துறந்த இரவா
கிறக்கம் ஏதும் உண்டோ
பறக்கும் பறவை கூடு சேரும்
பசித்த வயிறுதான் உறங்காது
பகலெல்லாம் உழைத்த உடலுக்கு
இரவொன்றும் இருளும் தேவை
இறைவனின் படைப்பே அதுவாகும்
அவன் உறங்கட்டும் அமைதியாக
அன்பரே வாரும் தேநீரருந்த
ஆதவன் கோபம் கொண்டான்
ஆதலால் இளங்காலையிலே சுடுகின்றான்

கருத்துகள் இல்லை: