சனி, 13 ஜூலை, 2019

உரைத்திடுவாயா தோழி

எங்கிருந்தாய் இத்தனை நாட்களாய்
எண்ணங்கள் சுமந்த மனதோடு
நினைவுகள் தான் நீண்டவை
நித்திரையும் தள்ளிப் போகும்
காலம் கடந்த கனவுகள்
நிலம் நீர் வான் முழுதும்
பரந்து விரிந்து பரவிநிற்கும்
இரவும் பகலும் தூரம் குறையும்
உள்ளம் துள்ளும் மகிழும்
உண்மை இன்பம் அதுவே !
தோன்றும் மன ஓசை தூதாய் வருமா
தோளுக்குச் சுமையாய் சிரம் சாய்க்குமா
காற்றில் பாடல்கள் காதோரம் வருமா
கவிதை வரிகளாய் கண்கள் காணுமா
நேற்றைய தொடர்ச்சி இன்றும் நேருமா
நெஞ்சுக்கினிய வரிகளில் நினைவு மூழ்குமா
உள்ளம் உருகுமா இதயம் நிறையுமா
உரைத்திடுவாயா தோழி நடுநிசி நிலவாய் நீ !

கருத்துகள் இல்லை: