சுட்டும் சுடர் கதிரவனே
சூடாகிப் போனாய் ஏனோ
வாட்டி வதைக்க வந்தாயோ
வாடிக்கை இதுவே உனக்கு
வேடிக்கை மனிதர் இவர்
வேகட்டும் என்பாயோ வேதனையால்
பகலவன் இப்போது பகைவனா
படட்டும் என்பதோ எண்ணம்
காடழித்து குளமழித்த குலமே
காணுங்கள் என்கோபம் என்றாயோ
திருந்தாத மனிதருக்கு தீயாக
தணலாக தகிக்க வந்தாயோ
சற்றே கருணை காட்டு
சகோதரன் வருணன் வரட்டும்
மழை நீரில் எம்மை நனைத்து
மன்னித்து விட்டுவிடு மகிழ்வோம் !
சூடாகிப் போனாய் ஏனோ
வாட்டி வதைக்க வந்தாயோ
வாடிக்கை இதுவே உனக்கு
வேடிக்கை மனிதர் இவர்
வேகட்டும் என்பாயோ வேதனையால்
பகலவன் இப்போது பகைவனா
படட்டும் என்பதோ எண்ணம்
காடழித்து குளமழித்த குலமே
காணுங்கள் என்கோபம் என்றாயோ
திருந்தாத மனிதருக்கு தீயாக
தணலாக தகிக்க வந்தாயோ
சற்றே கருணை காட்டு
சகோதரன் வருணன் வரட்டும்
மழை நீரில் எம்மை நனைத்து
மன்னித்து விட்டுவிடு மகிழ்வோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக