சனி, 13 ஜூலை, 2019

வருணன் வரட்டும்

சுட்டும் சுடர் கதிரவனே
சூடாகிப் போனாய் ஏனோ
வாட்டி வதைக்க வந்தாயோ
வாடிக்கை இதுவே உனக்கு
வேடிக்கை மனிதர் இவர்
வேகட்டும் என்பாயோ வேதனையால்
பகலவன் இப்போது பகைவனா
படட்டும் என்பதோ எண்ணம்
காடழித்து குளமழித்த குலமே
காணுங்கள் என்கோபம் என்றாயோ
திருந்தாத மனிதருக்கு தீயாக
தணலாக தகிக்க வந்தாயோ
சற்றே கருணை காட்டு
சகோதரன் வருணன் வரட்டும்
மழை நீரில் எம்மை நனைத்து
மன்னித்து விட்டுவிடு மகிழ்வோம் !

கருத்துகள் இல்லை: