எனக்குள்ளே உறங்கிக் கிடக்கும் எண்ணங்கள்
ஏட்டினிலே எழுதாத வண்ணக் கோலங்கள்
கண்மூடி மனத்திரையில் ஓடும் பிம்பங்கள்
கலைந்திடும் கனவுச் சிதறல்கள் கற்பனைகள்
காட்டாற்று வெள்ளமாய் கட்டுக்கு அடங்காமல்
காட்சிகள் கதம்பமாய் அர்த்தமற்ற தோற்றங்கள்
உணர்வோடு உறவாடும் உறைந்த ஊற்றுக்கள்
மணமுள்ள மலர்களாய் காகிதப் பூக்களாய்
சொல்லோடும் பொருளோடும் சேராத நினைவுகள்
சொல்லாத சொற்களில் ஆயிரம் மர்மங்கள்
மனித மனம்தான் மாயக் கருவூலம்
மனங்களைப் படித்திட மயனுக்கும் இயலாது
இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஊசலாடும்
இதனை மர்மதேசம் எனவும் கொளலாம் !
ஏட்டினிலே எழுதாத வண்ணக் கோலங்கள்
கண்மூடி மனத்திரையில் ஓடும் பிம்பங்கள்
கலைந்திடும் கனவுச் சிதறல்கள் கற்பனைகள்
காட்டாற்று வெள்ளமாய் கட்டுக்கு அடங்காமல்
காட்சிகள் கதம்பமாய் அர்த்தமற்ற தோற்றங்கள்
உணர்வோடு உறவாடும் உறைந்த ஊற்றுக்கள்
மணமுள்ள மலர்களாய் காகிதப் பூக்களாய்
சொல்லோடும் பொருளோடும் சேராத நினைவுகள்
சொல்லாத சொற்களில் ஆயிரம் மர்மங்கள்
மனித மனம்தான் மாயக் கருவூலம்
மனங்களைப் படித்திட மயனுக்கும் இயலாது
இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஊசலாடும்
இதனை மர்மதேசம் எனவும் கொளலாம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக