சனி, 13 ஜூலை, 2019

மனித மனம் மாயக் கருவூலம்

எனக்குள்ளே உறங்கிக் கிடக்கும் எண்ணங்கள்
ஏட்டினிலே எழுதாத வண்ணக் கோலங்கள்
கண்மூடி மனத்திரையில் ஓடும் பிம்பங்கள்
கலைந்திடும் கனவுச் சிதறல்கள் கற்பனைகள்
காட்டாற்று வெள்ளமாய் கட்டுக்கு அடங்காமல்
காட்சிகள் கதம்பமாய் அர்த்தமற்ற தோற்றங்கள்
உணர்வோடு உறவாடும் உறைந்த ஊற்றுக்கள்
மணமுள்ள மலர்களாய் காகிதப் பூக்களாய்
சொல்லோடும் பொருளோடும் சேராத நினைவுகள்
சொல்லாத சொற்களில் ஆயிரம் மர்மங்கள்
மனித மனம்தான் மாயக் கருவூலம்
மனங்களைப் படித்திட மயனுக்கும் இயலாது
இருளுக்கும் ஒளிக்கும் இடையே ஊசலாடும்
இதனை மர்மதேசம் எனவும் கொளலாம் !

கருத்துகள் இல்லை: