சனி, 20 ஜூலை, 2019

அமைதி கொள்

வாழ்க்கை விடைகாண முடியாப் புதிர்
குழம்பாமல் தெளிவான நீரேயில்லாத குளம்
பஞ்சு விற்றால் புயல் காற்றும்
உப்பு விற்றால் பெருமழையும் பெய்யும்
நிம்மதி தேடிஓடும் மனிதர்கள் நிரந்தரம்
நினைவலைகள் வண்ணம் மாறுதல் தினம்தினம்
தேடுதல் வேட்டை சாகும் வரையில்
தேய்ந்து ஓய்தல் நிரந்தர தூக்கத்தில்
தங்கமுலாம் பூசிய அணிகலன் அனைவரும்
தேய்த்துப் பார்த்தால் பித்தளை தகரம்
மிருகமும் தெய்வமும் கலந்த கலவைதான்
மானிடம் மட்டும் அவ்வப்போது தோன்றும்
நெல்வயலில் நெல்நாற்றே களையெடுக்க நேரும்
நெஞ்சம் பதைக்கும் கவலைகள் பெருகும்
நேர்மை கண்ணெதிரே கொலையுறும் காட்சி
வீரம் விவேகம் சமாதியில் உறக்கம்
உலகம் யுகஅழிவுக்காய் காத்திருக்கும் நேரம்
மாற்றம் அப்போதே வரும் மற்றொரு வடிவில்
மனதைத் தள்ளிவை அதுவரை அமைதிகொள் !

கருத்துகள் இல்லை: