சனி, 13 ஜூலை, 2019

காலம் செய்த கோலமிது

மலர் பூத்த மனமாய் மலர்ந்தாய்
மகிழம்பூ வாசமாய் பரவி நின்றாய்
திரை போட்டு மறைக்காத சிந்தனைகள்
தித்திக்கும் மனக் கேணி நினைவுகள்
காலம் செய்த கோலமிது கண்ணுறங்கு
ஞாலம் பெரிது நம்பிக்கை கொள்
வானமும் பூமியும் வாழும் கண்களுக்கு
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிந்திடு
கோலங்கள் போடவே புள்ளிகள் வரிகளாய்
கோர்வையாய் வரிகளே கவிதையின் தோன்றலாய்
வாழ்க்கையின் வரவும் செலவும் பலவகையானவை
வகுத்தலும் பெருக்கலும் கணக்கில் அடங்கிடும்
வருவதும் போவதும் இயற்கையின் நியதி
வாழும் வகைக்கு வழியிது கண்டுகொள் !

கருத்துகள் இல்லை: