நல்லூரில் பிறந்து அமுதூரில் வளர்ந்து
அழகூரில் விளையாடி பல்லூரில் படித்து
கல்லூரில் நுழைந்து காதலூரில் திளைத்து
கண்ணூரில் கலந்து களவூரில் ஒளிந்து
மனவூரில் மகிழ்ந்து மணவூரில் இணைந்து
பிள்ளையூரில் சேர்ந்து வேறூரில் சென்று
வேலையூரில் உழைத்து ஓய்வூரில் சுருங்கி
மூதூரில் குனிந்து எமனூரில் உயிர்நீத்து
எரியூரில் சாம்பலாகி ஆறூரில் கரைந்து
கடலூரில் கலந்து விண்ணூரில் சேர்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக