புதன், 3 ஜூன், 2020

சொக்கும் அழகு

கண்களுக்கு மையெழுதி புருவக் கீற்றிட்டு
பெண்ணுக்கு அணிகலனாய் வெட்கம் சூடி
இட்ட அடி நோகாமல் போகின்ற அணங்கே
கிட்ட வரவா கரம்பற்ற நெடுந்தூரம் நடைபயில
சொக்கும் அழகைப் படைத்தானோ பிரம்மன்
சொர்க்கம் பூமியிலே இதுவென்று சொல்வதற்கு
கண்ணசைந்தால் இதயத் துடிப்பு புரவிபோல்
விண்ணுக்கும் மண்ணுக்கும் மன ஓட்டம் துள்ளுவதேன்
மாயக்காரியோ மந்திரங்கள் கற்றாயோ புரியலியே
மான்போலத் துள்ளி ஓடும் உன்கால்கள்
மன்னவன் இவன் உயிரைக் கவர்ந்ததுவோ
உன்பிறப்பே அதிசயம் தானடி மங்கையே
ஊராரே உனக்கடிமை காந்தமோ உன்பார்வை
விடைதேடி பலநாட்கள் ஆராய்ந்து ஓய்ந்தேன்
வியப்பே மிஞ்சியது நீயே சொல்வாயா ?

கருத்துகள் இல்லை: