புதன், 3 ஜூன், 2020

விடியல் காணுமா

இரவு தோறும் நிலவு தோன்றி இனிமை சேர்க்குமா
இமைகள் மூடி இனிய கனவு உலகம் விரியுமா
கானக் குயிலின் கீதம் அங்கு காதில் சேருமா
வான வெளியில் மேகக் கூட்டம் பவனி வந்திடுமா
கோடை வெப்பம் தணியும் வரையில் மழையும் பெய்யுமா
கோல மயிலின் தோகை விரித்து நடனம் புரியுமா
கடலின் அலைகள் கரையைக் சேர்ந்து கால்கள் தழுவுமா
குடகு மலைக் காவிரியும் தஞ்சையின் நெல்வயலைச் சேருமா
மூங்கிலிலே காற்று நுழைந்து இனிய நாதம் பிறக்குமா
மூடிய கண் இமைகள் திறந்து விடியல் காணுமா

கருத்துகள் இல்லை: