வட்டமோ சதுரமோ வாழ்க்கை புதிரே
பட்டதும் படித்ததும் அனுபவ அறிவே
இன்று நாளை என்பதே மாயையே
நன்று வாழ்வினை நல்வழி செலுத்தல்
பல்வகை மனங்கள் பல்வகை உறவுகள்
பசித்தவர் புசித்திட படியளப்போர் உத்தமர்
கசிந்திடும் கண்ணீரை முந்தானை துடைக்கும்
கடவுளின் பிறவியே தாயெனும் உருவம்
உத்தமக் காதலை உள்ளத்தே இருத்தி
உயிரையும் தருவாள் இன்னுயிர் மனையாள்
பயணத்தில் இடையே சேர்ந்திடும் நட்பு
பலனைப் பாராத பண்பாளர் ஆவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக